செய்திகள்

பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: நடால், ஆன்டி முர்ரே காலிறுதிக்கு முன்னேற்றம்

Published On 2017-04-28 10:40 GMT   |   Update On 2017-04-28 10:41 GMT
பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடரில் முன்னணி வீரர்களான நடால் மற்றும் ஆன்டி முர்ரே ஆகியோர் காலிறுதிக்கு முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் முன்னணி வீரரான ரஃபேல் நடால் கெவின் ஆண்டர்சனை எதிர்கொண்டார். இதில் நடால் 6-3, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் ஆன்டி முர்ரே பெலிசியானோ லோபஸை எதிர்கொண்டார். இதில் 6-4, 6-4 என நேர்செட் கணக்கில் முர்ரே வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
Tags:    

Similar News