செய்திகள்

தியோதர் கோப்பை கிரிக்கெட்: தமிழக அணிக்கு விஜய் சங்கர் கேப்டன்

Published On 2017-03-23 04:12 GMT   |   Update On 2017-03-23 04:12 GMT
ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் வருகிற 25-ந் தேதி நடக்கவிருக்கும் தியோதர் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழக அணிக்கு விஜய் சங்கர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை :

தியோதர் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் வருகிற 25-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அணி வீரர்கள் வருமாறு:-

விஜய் சங்கர் (கேப்டன்), தினேஷ் கார்த்திக், கங்கா ஸ்ரீதர் ராஜூ, பாபா இந்த்ராஜித், சூர்யபிரகாஷ், கவுசிக் காந்தி, ஜெகதீசன், கவுசிக், முகமது, அந்தோணி தாஸ், ரோகித், ரஹில் ஷா, எம்.அஸ்வின், சாய்கிஷோர், வாஷிங்டன் சுந்தர்.

Similar News