செய்திகள்

சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டி - இந்திய வீராங்கனை பூஜா வெண்கலம் வென்றார்

Published On 2017-02-24 07:26 GMT   |   Update On 2017-02-24 07:26 GMT
சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டியின் 10மீட்டர் ஏர் ரைபில் பிரிவில் இந்திய வீராங்கனை பூஜா கட்கர் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
புதுடெல்லி:

சர்வதேச துப்பாக்கி சுடும் விளையாட்டு கூட்டமைப்பின் சார்பில் உலகக் கோப்பை தொடர் புது டெல்லியில் கடந்த 22-ம் தேதி முதல் நடந்து வருகின்றன. இத்தொடரின் பெண்கள் பிரிவில் 10 மீட்டர் ஏர் ரைபில் போட்டிகள் இன்று நடைபெற்றன.  

இப்போட்டியில், இந்தியா சார்பில் பங்கேற்ற துப்பாக்கி சுடும் வீராங்கனை பூஜா கட்கர் சிறப்பாக செயல்பட்டு 228.8 புள்ளிகளை பெற்று வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இதே போட்டியில் முதல் இரண்டு இடங்களை சீன வீராங்கனைகள் பிடித்துள்ளனர். 



பூஜா கட்கர், கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய துப்பாக்கிச் சுடும் சாம்பியன்ஷிப் போட்டியில்  தங்கப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News