செய்திகள்

மலேசியா மாஸ்டர்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்: காலிறுதியில் சாய்னா, அஜய் ஜெயராம்

Published On 2017-01-19 12:42 GMT   |   Update On 2017-01-19 12:42 GMT
மலேசியா மாஸ்டர்ஸ் கிராண்ட் பிரிக்ஸ் பேட்மிண்டன் தொடரில் சாய்னா நேவால், அஜய் ஜெயராம் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
பேட்மிண்டன் உலகத் தரவரிசையில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்றவருமான சாய்னா நேவால் மலேசியா மாஸ்டர்ஸ் கிராண்ட் பிரிக்ஸ் கோல்டு பேட்மிண்டன் தொடரின் 2-வது சுற்றில் இந்தோனேசியாவின் ஹன்னா ரமாடினியை எதிர்கொண்டார். இதில் சாய்னா நேவால் 21-17, 21-12 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

ஆண்களுக்கான 2-வது சுற்றில் இந்திய வீரர் அஜய் ஜெயராம் சீன தைபே வீரர் எச்.எச். யியை எதிர்கொண்டார். இந்த கடும் போராட்டத்திற்குப் பின் அஜய் ஜெயராம் 21-12, 15-21, 21-15 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

ஆனால், பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடியான அபர்ணா பாலன் - பிரஜக்தா சவாந்த் ஜோடி சீன தைபே ஜோடியிடம் தோல்வியடைந்தது.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் மனு அத்ரி - பி. சுமீத் ரெட்டி ஜோடி இந்தோனேசியா ஜோடியிடம் தோல்வியடைந்தது. மற்றொரு ஆண்கள் இரட்டையர் பிரிவில் எம்.ஆர். அர்ஜுன் - ராமச்சந்திரன் ஜோடியும் தோல்வியடைந்தது.

Similar News