செய்திகள்

மதிப்பு மிக்க வீரர் அஸ்வின்: வாட்மோர் புகழாரம்

Published On 2017-01-19 04:16 GMT   |   Update On 2017-01-19 04:16 GMT
உலக கிரிக்கெட் அரங்கில் மிகவும் மதிப்பு மிக்க வீரர்களில் அஸ்வினும் ஒருவர் என்று டேவ் வாட்மோர் கூறியுள்ளார். இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
சென்னை :

இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம், ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகளின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டவர், டேவ் வாட்மோர். அவர் சென்னையில் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘உலக கிரிக்கெட் அரங்கில் மிகவும் மதிப்பு மிக்க வீரர்களில் அஸ்வினும் ஒருவர். அவர் வெறும் பவுலர் மட்டும் அல்ல. 6-வது வரிசையில் இறங்கி சதமும் அடிக்கக் கூடியவர்.

தமிழகத்தில் இருந்து வந்த என்ஜினீயரான அஸ்வின், மிகவும் சாதுர்யமான ஒரு வீரர். இந்திய கிரிக்கெட்டின் சொத்து. அவரை அணியில் பெற்றிருப்பதால் இந்திய கேப்டன் விராட் கோலி உண்மையிலேயே மகிழ்ச்சியில் இருப்பார். இலங்கையின் முரளிதரன் உலகத் தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர் என்பதில் சந்தேகம் கிடையாது. ஆனால் அவர் பேட்ஸ்மேன் அல்ல. அஸ்வின் அதையும் செய்கிறார்’ என்றார்.

Similar News