செய்திகள்

வங்காள தேசத்திற்கு எதிரான கடைசி டெஸ்ட்: நியூசி. அணியில் ஜீத்தன் பட்டேல் சேர்ப்பு

Published On 2016-12-29 11:29 GMT   |   Update On 2016-12-29 11:29 GMT
வங்காள தேசத்திற்கு எதிரான 3-வது மற்றும் கடசைி ஒருநாள் போட்டிக்கான நியூசிலாந்து அணியில் ஜீத்தன் பட்டேல் சேர்க்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து - வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்றுடன் முடிந்த இரண்டு போட்டிகளிலும் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரை 2-0 எனக்கைப்பற்றி முன்னிலைப் பெற்றுள்ளது.

3-வது மற்றும் கடைசி போட்டி சனிக்கிழமை (31-ந்தேதி) நடக்கிறது. இதற்கான நியூசிலாந்து அணியில் சுழற்பந்து வீச்சாளர் ஜீத்தன் பட்டேல் சேர்க்கப்பட்டுள்ளார். வங்காள தேச அணியில் முன்வரிசையில் விளையாடும் ஐந்து பேட்ஸ்மேன்களில் மூவர் இடது கை பேட்ஸ்மேன்கள். இதனால் ஜீத்தன் பட்டேல் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பட்டேல் 2009-ம் ஆண்டு கடைசியாக சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடியவர். அதன்பின் தற்போதுதான் ஒருநாள் அணியில் இடம்பெற்றுள்ளார். சுமார் மூன்று வருடங்களுக்குப் பிறகு இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இடம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News