செய்திகள்

இந்தியாவுடன் போட்டியை புறக்கணிக்கும் எண்ணம் இல்லை: சகாரியார் கான்

Published On 2016-12-04 08:25 GMT   |   Update On 2016-12-04 08:25 GMT
பாகிஸ்தான் ஆக்கி சம்மேளனம் எடுத்த முடிவை நாங்கள் பின்பற்ற மாட்டோம். இந்தியாவுடன் போட்டியை புறக்கணிக்கும் எண்ணம் இல்லை என்று சகாரியார் கான் கருத்து தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் ஆக்கி சம்மேளம் இந்தியாவுடன் அதன் சொந்த மண்ணில் சர்வதேச ஆக்கி போட்டிகளில் மோதாமல் புறக்கணிப்போம் என்று அறிவித்துள்ளது.

இதுபற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகி சகாரியார் கானிடம் கேட்டபோது, பாகிஸ்தான் ஆக்கி சம்மேளனம் எடுத்த முடிவை நாங்கள் பின்பற்ற மாட்டோம்.

ஏனென்றால் இது கோடிக்கணக்கான மக்கள் சம்பந்தப்பட்டது. அவர்கள் இந்தியா- பாகிஸ்தான் மோதும் போட்டியை காண விரும்புகிறார்கள். இப்போட்டியால் பெரிய வருவாய் கிரிக்கெட் வாரியங்களுக்கு கிடைத்ததும். புறக்கணிப்பால் எங்களது வருவாய் தான் பாதிக்கும் என்றார்.

Similar News