செய்திகள்

டோனி கேப்டனாக நீடித்தால் அடுத்த உலக கோப்பையை வெல்ல வாய்ப்பு: ஹேமங் பதானி

Published On 2016-11-30 11:54 GMT   |   Update On 2016-11-30 11:54 GMT
ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளுக்கு டோனி கேப்டனாக நீடித்தால் அடுத்த உலக கோப்பையை வெல்ல வாய்ப்பு உள்ளது என்ற ஹேமங் பதானி கூறியுள்ளார்.
சேலம்:

இந்திய கிரிக்கெட் அணியில் 2000-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை சிறப்பாக விளையாடி தனக்கென தனி இடத்தை பிடித்தவர் ஹேமந்த் பதானி. இன்று சேலத்திற்கு வந்த ஹேமங் பதானி நிருபர்களிடம் கூறியதாவது-

இந்திய கிரிக்கெட் அணியில் கர்நாடகா மற்றும் மும்பையை சேர்ந்தவர்கள் அதிக அளவில் இடம் பெற்றிருந்தாலும் திறமை உள்ளவர்களுக்கு மட்டுமே அணியில் வாய்ப்பு கிடைக்கிறது. திறமை இல்லாதவர்கள் சேர்க்கப்படுவதாக புகார்கள் எழுந்தாலும் அது நிரூபிக்கப்படவில்லை.

இந்திய அணிக்கு பயிற்சி அளிப்பவர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்களா, உள்நாட்டை சேர்ந்தவர்களா? என்பது முக்கியம் அல்ல, இந்திய அணி வீரர்கள் வெற்றிக்கு சிறந்த வழிகாட்டியாக யார் இருந்தாலும் அதனை வரவேற்க வேண்டும்.

இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு நாள் போட்டிகளுக்கு கேப்டனாக இருக்கும் டோனி அணியை சிறப்பாக வழி நடத்துகிறார். அடுத்த உலக கோப்பை போட்டி வரை அவர் இந்திய அணியின் கேப்டனாக நீடித்தால் இந்திய அணிக்கு கோப்பை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

20-20 போட்டிகள், ஒரு நாள் போட்டி, டெஸ்ட் போட்டிகளில் என ஒவ்வொரு போட்டிகளுக்கும் தனி தனி திறமை தேவைப்படுவதால் ஒரு போட்டியில் வெற்றி பெறுபவர் மற்ற போட்டிகளில் எளிதாக வெற்றி பெற முடியாது.

திறமையாக விளையாடியதால் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டிக்குள் தமிழக அணி நுழைந்தது. ஆனால் வீரர்கள் இடையே ஏற்பட்ட பதட்டத்தால் அவர்களால் அதில் வெற்றி பெற்று கோப்பையை பெற முடியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News