செய்திகள்

ஒலிம்பிக் கொடி டோக்கியோ சென்றது

Published On 2016-08-25 08:19 GMT   |   Update On 2016-08-25 08:19 GMT
அடுத்த ஒலிம்பிக் போட்டி 2020-ம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கிறது. இதற்கான ஒலிம்பிக் கொடி டோக்கியோ நகரம் சென்றடைந்தது.
உலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழா ஒலிம்பிக் போட்டியாகும். 31-வது ஒலிம்பிக் போட்டி பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனரோ நகரில் சமீபத்தில் நடந்தது.

அடுத்த ஒலிம்பிக் போட்டி 2020-ம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கிறது. இதற்கான ஒலிம்பிக் கொடி டோக்கியோ நகரம் சென்றடைந்தது. ரியோ ஒலிம்பிக் நிறைவு விழாவில் இந்த கொடி ஜப்பானிடம் வழங்கப்பட்டது.

ஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் 2-வது முறையாக நடைபெற இருக்கிறது. இதற்கு முன்பு 1964-ம் ஆண்டு அங்கு நடந்தது.

Similar News