செய்திகள்
திருவள்ளூர் மாவட்ட செஸ் சங்கம் மற்றும் எஸ்.ஏ.என்ஜீனியரிங் கல்லூரி சார்பில் டி.ஐ.சைக்கிள் நிறுவன ஆதரவுடன் பள்ளிகள் இடையேயான மாநில அளவிலான செஸ் போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்ட செஸ் சங்கம் மற்றும் எஸ்.ஏ.என்ஜீனியரிங் கல்லூரி சார்பில் டி.ஐ.சைக்கிள் நிறுவன ஆதரவுடன் பள்ளிகள் இடையேயான மாநில அளவிலான செஸ் போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது. இந்தப் போட்டி வருகிற 9 மற்றும் 10–ந்தேதிகளில் திருவேற்காட்டில் உள்ள சுதர்சனம் வித்யாஷரம் பள்ளியில் நடக்கிறது.
8,10,12, 14 மற்றும் 25 வயதுக்குட்பட்ட பிரிவில் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் இதில் பங்கேற்கிறார்கள். முதல் 10 இடங்களை பிடிப்பவர்களுக்கு சைக்கிள் பரிசாக வழங்கப்படும்.
மேற்கண்ட தகவலை திருவள்ளூர் மாவட்ட செஸ் சங்க செயலாளர் எஸ்.பலராமன் தெரிவித்துள்ளார்.
8,10,12, 14 மற்றும் 25 வயதுக்குட்பட்ட பிரிவில் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் இதில் பங்கேற்கிறார்கள். முதல் 10 இடங்களை பிடிப்பவர்களுக்கு சைக்கிள் பரிசாக வழங்கப்படும்.
மேற்கண்ட தகவலை திருவள்ளூர் மாவட்ட செஸ் சங்க செயலாளர் எஸ்.பலராமன் தெரிவித்துள்ளார்.