இந்தியா

மனைவிக்கு 'பார்பி' பொம்மையை பரிசளித்த கணவர்

Published On 2023-07-05 08:50 GMT   |   Update On 2023-07-05 08:50 GMT
  • பெண் டுவிட்டரில் பொம்மையின் படத்தை பதிவிட்டு பகிர்ந்துள்ள பதிவு வைரலாகி வருகிறது.
  • பெண் ஒருவருக்கு அவரது கணவர் ‘பார்பி’ பொம்மையை பரிசாக அளித்துள்ளார்.

தம்பதிகள் தங்கள் இணையருக்கு தங்கம், வைரம் போன்ற விலை உயர்ந்த நகைகளை பரிசாக வழங்குவதை கேள்விபட்டிருக்கிறோம். ஆனால் பெண் ஒருவருக்கு அவரது கணவர் 'பார்பி' பொம்மையை பரிசாக அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அந்த பெண் டுவிட்டரில் பொம்மையின் படத்தை பதிவிட்டு பகிர்ந்துள்ள பதிவு வைரலாகி வருகிறது. அதில் அந்த பெண், குழந்தையாக இருந்த போது தன்னிடம் இருந்து ஒரு பொம்மையை யாரோ எடுத்து சென்றுவிட்டதாக தனது கணவரிடம் ஒருமுறை குறிப்பிட்டிருந்தாராம். அதனால் அவரது கணவர் தனது மனைவிக்கு 'பார்பி' பொம்மையை பரிசளித்துள்ளார். மேலும், 'என் அருமை மனைவி ஆயிஷாவுக்கு... அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் நீண்ட காலத்திற்கு முன்பு இருந்தாலும், நீ இழந்த அனைத்தையும் மற்றும் உன்னிடம் இருந்து பறிக்கப்பட்ட அனைத்தையும் நான் எப்போதும் பெற்றுத் தருவேன் என்பதை உறுதி செய்கிறேன். உன்னை நேசிக்கிறேன்'-உன் கணவன் என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகிய நிலையில், பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News