மத்திய அரசு அவசர சட்டம்- உத்தவ் தாக்கரேயுடன் கெஜ்ரிவால் சந்திப்பு
- டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு சமீபத்தில் அவசர சட்டம் கொண்டு வந்தது.
- கடந்த ஞாயிற்றுக்கிழமை பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாருடனான சந்திப்பு நடந்தது.
டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு சமீபத்தில் அவசர சட்டம் கொண்டு வந்தது. மத்திய அரசின் இந்த உத்தரவு சுப்ரீம் கோர்ட்டை அவமதிப்பதாகும் என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது.
மத்திய அரசின் இந்த அவசர சட்டத்துக்கு எதிராக டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு திரட்டி வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாருடனான சந்திப்பு நடந்தது. நேற்று அவர் பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மானுடன் கொல்கத்தா சென்று மேற்கு வங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியை சந்தித்தார். கெஜ்ரிவாலின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.
இந்த நிலையில் கெஜ்ரிவாலும், பகவந்த்சிங் மானும் இன்று மகாராஷ்டிரா முதல்-மந்திரியும், சிவசேனா தலைவருமான உத்தவ்தாக்கேரயை அவரது இல்லத்தில் சென்று சந்தித்தார்கள்.