இந்தியா

பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நாளை இங்கிலாந்து பயணம்

Published On 2024-01-07 08:21 GMT   |   Update On 2024-01-07 08:21 GMT
  • பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நாளை இங்கிலாந்துக்கு பயணம் செய்ய உள்ளார்.
  • கடந்த 22 ஆண்டில் எந்த பாதுகாப்பு மந்திரியும் இங்கிலாந்து சென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புதுடெல்லி:

இந்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் நாளை முதல் இங்கிலாந்து நாட்டுக்கு பயணம் செய்ய உள்ளார். அந்நாட்டு பாதுகாப்புச் செயலருடன் விரிவான சந்திப்பு நடத்துகிறார்.

லண்டனில் மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கரின் நினைவிடங்களுக்குச் செல்லும் அவர், அங்கு புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

காலிஸ்தானுக்கு ஆதரவான வன்முறைகள் உள்ளிட்ட தீர்க்கப்படாத சில சிக்கல்களை கருத்தில் கொண்டு இந்தப் பயணம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 22 ஆண்டில் எந்த இந்திய பாதுகாப்பு அமைச்சரும் இங்கிலாந்துக்கு சென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News