இந்தியா

கொச்சி அருகே 9 பேரை தெருநாய் கடித்ததால் பரபரப்பு

Published On 2024-05-09 08:18 GMT   |   Update On 2024-05-09 08:18 GMT
  • பெண்கள் உள்பட 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.
  • கடித்துவிட்டு ஓடிய தெருநாயை மாநகராட்சி ஊழியர்கள் தேடி வருகின்றனர்.

கேரளா மாநிலம் கொச்சி அருகே மூவாட்டுப்புழாவில் 9 பேரை துரத்தி துரத்தி தெருநாய் கடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

இதில், சிறுவன், பெண்கள் உள்பட 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவர்களை மருத்துவர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

9 பேரை கடித்துவிட்டு ஓடிய தெருநாயை மாநகராட்சி ஊழியர்கள் தேடி வருகின்றனர்.

மேலும், கோழிக்கோடு அருகே ராதாபுரத்தில் முதியவர்கள் இருவரை கடித்துவிட்டு தெருநாய் ஓடியுள்ளது.

Tags:    

Similar News