இந்தியா

பாராளுமன்றம்

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ம் தேதி தொடக்கம்

Published On 2022-06-30 17:44 GMT   |   Update On 2022-06-30 17:44 GMT
  • பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18-ம் தேதி தொடங்க உள்ளது.
  • ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் 21ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

புதுடெல்லி:

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது.

மழைக்கால கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதேவேளையில், அக்னிபத், மகாராஷ்டிரா அரசியல் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளது.

இதனால், பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அனல் பறக்கும் எனத்தெரிகிறது.

மேலும், 17 நாட்கள் நடக்கும் இந்தக் கூட்டத்தின்போது ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது.

Tags:    

Similar News