இந்தியா

திரவுபதி முர்மு    சோனியா காந்தி

திரவுபதி முர்முவுக்கு சோனியாகாந்தி, சரத்பவார் உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் வாழ்த்து

Published On 2022-07-21 22:12 GMT   |   Update On 2022-07-21 22:12 GMT
  • விரைவில் சந்திக்க ஆவலுடன் காத்திருப்பதாக சோனியா காந்தி கருத்து.
  • ராகுல் காந்தியும் திரவுபதி முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாட்டின் 15வது குடியரசு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள திரவுபதி முர்முவுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரவுபதி முர்முவுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும், அவரையும் விரைவில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி.ரா குல் காந்தியும் திரவுபதி முர்மு தேர்வுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரவுபதி முர்மு நமது அரசியல் சாசனத்தின் கொள்கைகளைப் பாதுகாப்பார் என நாடே எதிர்நோக்கி உள்ளதாக மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.

சரத் ​​பவார் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், குடியரசு தலைவர் பொறுப்பை ஏற்க தயாராகும் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். உங்கள் பதவிக்காலம் முழுவதும் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட யஷ்வந்த் சின்ஹாவும் திரவுபதி முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

Tags:    

Similar News