இந்தியா

டிஜே பார்ட்டியில் பெண்ணிடம் சில்மிஷம்... தட்டிக்கேட்ட நபரை குத்திக்கொன்ற கொடூரம்

Published On 2022-09-25 08:50 GMT   |   Update On 2022-09-25 08:50 GMT
  • சில்மிஷத்தில் ஈடுபட்ட நபர்களை அந்த இடத்தில் இருந்து உடனே வெளியேறும்படி கூறி உள்ளார்.
  • ஆத்திரத்துடன் வெளியேறிய நபர்கள், நள்ளிரவு 12.30 மணியளவில் மீண்டும் வந்து தாக்குதல் நடத்தினர்

கொச்சி:

கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள கலூர் ஸ்டேடியம் அருகில் சனிக்கிழமை இரவு டிஜே பார்ட்டி மற்றும் இசைநிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆண்களும், பெண்களும் கலந்துகொண்டனர். அப்போது ஒரு பெண்ணிடம் சிலர் தவறாக நடந்துள்ளனர். இதை போட்டி ஏற்பாட்டாளர் தட்டிக்கேட்டதுடன், சில்மிஷத்தில் ஈடுபட்ட நபர்களை அந்த இடத்தில் இருந்து உடனே வெளியேறும்படி கூறி உள்ளார்.

இதனால் ஆத்திரத்துடன் அங்கிருந்து வெளியேறிய நபர்கள், நள்ளிரவு 12.30 மணியளவில் மீண்டும் அங்கு வந்து, தங்களை விரட்டியடித்த போட்டி ஏற்பாட்டாளரை கத்தியால் சரமாரியாக குத்தி உள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். 

Tags:    

Similar News