இந்தியா

சிறுவர்களை பாலியல் பலாத்காரம் செய்து செல்போனில் பதிவு செய்த சமையல்காரர்- கைது

Published On 2023-10-05 11:04 GMT   |   Update On 2023-10-05 11:04 GMT
  • சம்பவம் குறித்து யாரிடமும் தெரிவிக்க கூடாது என்றும் மிரட்டி உள்ளார்.
  • பொதுமக்களுக்கு தெரியவந்ததும் சமையல்காரரை மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கினர்.

பெங்களூரு:

கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் உள்ள ஒரு பிரபல நட்சத்திர ஓட்டலில் ஒடிசாவைச் சேர்ந்த 47 வயதுள்ள ஒருவர் சமையல்காரராக வேலை பார்த்து வந்தார். இவர் ஹூப்ளியில் உள்ள சித்தலிங்கேஸ்வரர் காலனியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வசித்து வருகிறார்.

இவர் சிறுவர்களுடன் பழகி அவர்களுடன் நட்பு ஏற்படுத்திக் கொண்டு திண்பண்டங்கள், சாக்லேட்டுகள் மற்றும் பணம் தருவதாக ஏமாற்றி தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் சிறுவர்களை கத்தியை காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவர்களை இயற்கைக்கு மாறான பாலியல் செயல்களுக்கு வற்புறுத்தி மற்றொரு சிறுவனின் உதவியுடன் தனது செல்போனில் வீடியோ எடுத்து உள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து யாரிடமும் தெரிவிக்க கூடாது என்றும் மிரட்டி உள்ளார்.

இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு தெரியவந்ததும் சமையல்காரரை மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கினர். பின்னர் பழைய ஹூப்ளி போலீசில் அவரை ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் அவர் மீது இயற்கைக்கு மாறான குற்றங்கள், கொலை மிரட்டல், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரது செல்போனையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News