இந்தியா

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ அமானுல்லா கான் கைது

Published On 2022-09-16 15:55 GMT   |   Update On 2022-09-16 15:55 GMT
  • இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமானுல்லா கான் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
  • சோதனையில் ரூ.12 லட்சம் ரொக்கம் மற்றும் உரிமம் பெறாத துப்பாக்கி கைப்பற்றப்பட்டதாக தகவல்

புதுடெல்லி:

புதுடெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ அமானுல்லா கான், டெல்லி வக்ப் வாரிய தலைவராக பதவி வகித்து வருகிறார். வக்ப் வாரியத்தில் சட்டவிரோதமாக நியமனம் செய்தது தொடர்பாக இவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி அமானுல்லா கானுக்கு லஞ்ச ஒழிப்பு துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதன்படி இன்று மதியம் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பிறகு அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அதன்பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டில் இருந்து ரூ.12 லட்சம் ரொக்கம் மற்றும் உரிமம் பெறாத துப்பாக்கி கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News