இந்தியா
அரியானாவில் சாலையோரம் தூங்கிய 3 தொழிலாளர்கள் லாரி மோதி பலி

அரியானாவில் சாலையோரம் தூங்கிய தொழிலாளர்கள் மீது லாரி மோதி விபத்து- 3 பேர் பலி

Published On 2022-05-19 09:57 GMT   |   Update On 2022-05-19 09:57 GMT
அரியானாவில் சாலையோரம் படுத்து தூங்கி கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது லாரி ஏறியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
சண்டிகர்:

அரியானா மாநிலம் ஜாஜ்ஜார் மாவட்டத்தில் பாலம் கட்டுமான பணிக்காக உத்தரபிரதேசத்தில் இருந்து வந்த 18 தொழிலாளர்கள் சாலையோரம் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். அப்போது லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி தூங்கி கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது ஏறியது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 

12 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார்.
Tags:    

Similar News