இந்தியா
சிவசேனா கட்சி எம்எல்ஏ துபாயில் மரணம்
இவரது இறப்பு குறித்து டெல்லி மந்திரி உத்தவ் தாக்கரேயிடம் தெரிவித்துள்ளோம் என கட்சி நிர்வாகி கூறியுள்ளார்.
மும்பை:
சிவசேனா கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ரமேஷ் லட்கே மும்பையில் உள்ள கிழக்கு அந்தேரி சட்டமன்ற தொகுதியில் இருமுறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்.
52 வயதான ரமேஷ் லட்கே விடுமுறைக்காக தனது குடும்பத்துடன் துபாய்க்கு சென்றிருந்தார். அங்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு நேற்று இறந்துவிட்டதாக கட்சி நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார்.
மேலும், இவரது இறப்பு குறித்து டெல்லி மந்திரி உத்தவ் தாக்கரேயிடம் தெரிவித்துள்ளோம் மற்றும் மற்ற கட்சி மூத்த நிர்வாகிகள் ரமேஷ் லட்கேயின் உடலை இந்தியாவிற்கு எடுத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். அதுமட்டுமல்லாமல் அவரது உடல் நாளை கொண்டு வரப்படும் என நம்புகிறோம் என்றும் கூறினார்.