இந்தியா
கோப்புப்படம்

கடலைச்செடியை வேறோடு பிடிங்கியதால் கோபம்: 7 வயது சிறுவனை அடித்துக்கொன்ற மற்றொரு சிறுவன்

Published On 2022-01-29 09:36 GMT   |   Update On 2022-01-29 09:36 GMT
கொண்டைக்கடலை செடியை வேறோடு பிடிங்கியதால் கோபம் அடைந்த 12 வயது சிறுவன், 7 வயது சிறுவனை அடித்துக் கொன்ற சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.
மத்திய பிரதேசம், புர்ஹான்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் விவசாயி ஒருவர் கொண்டைக்கடலை பயிரிட்டுள்ளார். பயிர் பாதி பருவம் அடைந்துள்ள நிலையில், அந்த விவசாயி தனது 12 வயது மகனை காவலுக்கு அமர்த்தியுள்ளார்.

12 வயது சிறுவன் கொண்டைக்கடலை செடிகளை பாதுகாத்து வந்த நிலையில், அந்த பகுதியில் உள்ள மற்றொரு ஏழு வயது சிறுவன் கொண்டைக்கடலை செடியை வேறோடு பிடிங்கி, அதில் உள்ள கடலையை தின்று கொண்டிருந்தான். இதை பார்த்த 12 வயது சிறுவனுக்கு கோபம் வந்தது.

7 வயது சிறுவனை கண்மூடித்தனமாக தாக்கினான். இதில் 7 வயது சிறுவன் மயங்கி கீழே விழுந்தான். இதனால் பதறிப்போன 12 வயது சிறுவன் அந்த பையனை எழுப்ப முயற்சித்துள்ளான். ஆனால் அவனது முயற்சி தோல்வியடைய, வீட்டிற்குச் சென்று விட்டான்.

அடுத்த நாள் பயிருள்ள இடத்திற்கு வந்த சிறுவன், அந்த பையன் அப்படியே மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தான். உடனடியாக வீட்டிற்கு விரைந்து பெற்றோரிடம் தகவல் தெரிவித்தார். பின்னர் போலீஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.



பிரேதச பரிசோதனையில் 7 வயது சிறுவன் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் விசாணை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

கொண்டைக்கடலைக்காக சிறுவன் ஒருவன் மற்றொரு சிறுவனை அடித்ததுக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News