இந்தியா
கொரோனா வைரஸ்

அதிகரிக்கும் கொரோனா பரவல் - இந்தியாவில் இன்று 2.64 லட்சம் பேருக்கு பாதிப்பு

Published On 2022-01-14 04:22 GMT   |   Update On 2022-01-14 04:22 GMT
இந்தியாவில் இன்று ஒரேநாளில் 2.64 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக நாட்டில் கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் அதிகரிக்கிறது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. 

அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலாம் நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 65 லட்சத்து 82 ஆயிரத்து 129 ஆக அதிகரித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1 லட்சத்து 9 ஆயிரத்து 345 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 48 லட்சத்து 24 ஆயிரத்து 706 ஆக அதிகரித்துள்ளது. 

நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 12 லட்சத்து 72 ஆயிரத்து 73 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 315 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 85 ஆயிரத்து 350 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News