இந்தியா
ரெயில் விபத்து

மேற்கு வங்காள ரெயில் விபத்து - பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு

Published On 2022-01-14 02:47 GMT   |   Update On 2022-01-14 04:25 GMT
மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பிரதமர் மோடியுடன் பேசி, மீட்புப் பணிகள் குறித்த நிலைமையை விவரித்தார்.
கொல்கத்தா:

மேற்கு வங்காள மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் பிகானர்-கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று தடம்புரண்டு விபத்தில் சிக்கியது. 
மொத்தம் 12 பெட்டிகள் தடம்புரண்டன. தோகோமணி அருகே நிகழ்ந்த இந்த விபத்தில் 3 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 45 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, ரெயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என ரெயில்வே அறிவித்துள்ளது. படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
 
ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்த அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக்கொள்வதாக தெரிவித்தார்.

இந்நிலையில், ரெயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது என வடகிழக்கு ரெயில்வே, தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News