இந்தியா
கோப்புப் படம்

ஜம்மு காஷ்மீர் - பாதுகாப்பு படை நடத்திய தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

Published On 2022-01-09 21:47 GMT   |   Update On 2022-01-09 21:47 GMT
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மற்றும் காஷ்மீர் மாநில போலீசார் கூட்டாக இணைந்து பயங்கரவாத ஒழிப்பு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜம்மு:

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் ஹசன்போரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
 
இதையடுத்த் அங்கு சென்ற பாதுகாப்பு படையினரை நோக்கி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இந்த என்கவுண்டரில் அடையாளம் தெரியாத 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து வெடிமருந்துகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என காஷ்மீர் போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News