இந்தியா
வாலிபரை துரத்தும் யானை

வாலிபரை பந்தாடிய யானை- பதற வைக்கும் வீடியோ காட்சி

Published On 2021-12-20 02:23 GMT   |   Update On 2021-12-20 02:29 GMT
அசாம் மாநிலத்தில் காட்டு யானை ஒன்று வாலிபரை விரட்டி பந்தாடிய வீடியோ காண்பவர்களை பதற வைத்துள்ளது
அசாம் மாநிலம்  துப்ரி மாவட்டம் தமர்ஹட் பகுதியில் உள்ள கிராமத்தில் நேற்று முன்தினம் காட்டு யானை ஒன்று 30 வயதான வாலிபரை துரத்திச் சென்றது. இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த வாலிபரை, தனது தும்பிக்கையால் தூக்கிய யானை பின் தாக்கி உள்ளது.

இதில் அந்த வாலிபர் பலத்த காயமடைந்ததை அடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் யானையை காட்டுப் பகுதியை நோக்கி துரத்தப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

காட்டு யானை வாலிபரை பந்தாடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த காட்சி பார்ப்பவர்களை பதற வைத்துள்ளது.

இதையும் படியுங்கள்..  குற்றாலம் அருவிகளில் இன்று முதல் குளிக்க அனுமதி
Tags:    

Similar News