செய்திகள்
இந்தியாவில் கொரோனா கட்டுப்பாடுகள் நவம்பர் 30-ந்தேதி வரை நீட்டிப்பு
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 16 ஆயிரம் என்ற அளவில் இருக்கும் நிலையில், கட்டுப்பாடுகளை நவம்பர் 30-ந்தேதி வரை நீட்டித்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறையகுறைய கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்றுநோய் மேலும் பரவாமல் தடுக்க கட்டுப்பாடுகளை நவம்பர் 30-ந்தேதி வரை நீட்டித்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.