செய்திகள்
தீயணைப்பு பணி

பேக்கேஜிங் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து- 2 பேர் உயிரிழப்பு

Published On 2021-10-18 04:13 GMT   |   Update On 2021-10-18 04:13 GMT
தொழிற்சாலையில் தீப்பிடித்ததும் ஊழியர்கள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர், சிலர் மாடியில் இருந்து குதித்து உயிர்தப்பினர்.
சூரத்:

குஜராத் மாநிலம் சூரத் மாவட்டம் வரேஜ்கிராமத்தில் உள்ள பேக்கேஜிங் தொழிற்சாலையில் இன்று அதிகாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ஊழியர்கள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். சிலர் மாடியில் இருந்து குதித்து உயிர்தப்பினர்.

இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். தொழிற்சாலைக்குள் சிக்கியிருந்த ஊழியர்களையும் மீட்டனர்.

இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 125 பேர் மீட்கப்பட்டதாகவும் தீயணைப்புத் துறை கூறி உள்ளது.
Tags:    

Similar News