செய்திகள்
நேருக்கு நேர் மோதிக்கொண்ட வாகனங்கள்

மருத்துவமனையில் இருந்து திரும்பியபோது பயங்கர விபத்து- 5 பேர் பலி

Published On 2021-08-06 15:27 GMT   |   Update On 2021-08-06 15:27 GMT
விபத்தில் இறந்தவர்கள் மேடக் மாவட்டம் சங்காய்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர்கள், அவர்களில் 3 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம், சவுத்கர் கிராமத்தின் அருகே, காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் கார் கடுமையாக சேதமடைந்தது. காரில் இருந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விபத்தில் இறந்தவர்கள் மேடக் மாவட்டம் சங்காய்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் 3 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அந்த குடும்பத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவனது தாய்-தந்தை இருவரும் சங்காரெட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துவிட்டு வீடு திரும்பியபோது இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது.
Tags:    

Similar News