செய்திகள்
இடிந்து விழுந்த ஜெயில் சுவர்

மத்திய பிரதேசத்தில் ஜெயில் சுவர் இடிந்து 22 கைதிகள் காயம்

Published On 2021-07-31 07:06 GMT   |   Update On 2021-07-31 07:06 GMT
மத்திய பிரதேசத்தில் ஜெயில் சுவர் இடிந்து விழுந்ததில் 22 கைதிகள் படுகாயமடைந்தனர். மேலும் காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பிந்தி:

மத்திய பிரதேச மாநிலம் பிந்தி மாவட்டத்தில் ஜெயில் கட்டிடம் மிகவும் பழமையானதாகும். இந்த நிலையில் இன்று காலை ஜெயலில் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதன் இடிபாடுகளில் சிக்கி 22 கைதிகள் படுகாயம் அடைந்தனர்.

உடனே போலீசார் அங்கே விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். கைதிகளை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு மனோஜ்குமார் சிங் கூறும்போது, சுவர் இடிந்து விழுந்ததில் காயம் அடைந்த கைதிகளில் ஒருவருக்கு அதிகமான காயங்கள் ஏற்பட்டுள்ளது. அவர் குவாலியர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மற்றவர்களுக்கு மாவட்ட ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஜெயில் கட்டிடம் மிகவும் பழமையானது. சில நாட்களாக பெய்த மழை காரணமாக ஜெயில் சுவர் இடிந்து விழுந்து இருக்கலாம் என்றார்.
Tags:    

Similar News