செய்திகள்
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலில் 300 தொகுதியில் வெற்றி பெறுவோம் - யோகி ஆதித்யநாத்
உ.பி. பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் பா.ஜ.க. பெற்ற வெற்றிக்கு அம்மாநில முதல்மந்திரியின் செயல்பாடுகளே காரணம் என பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
லக்னோ:
உத்தர பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற மாவட்ட பஞ்சாயத்து தலைவருக்கான தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது.
இந்நிலையில், உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மாவட்ட பஞ்சாயத்து தலைவருக்கான தேர்தலில் 75 இடங்களில் 67 இடங்களை பா.ஜ.க. கைப்பற்றி உள்ளது.
இதற்காக பா.ஜ.க. தொண்டர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வரும் 2022-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் பா.ஜ.க. வெற்றி பெறும். நாங்கள் 300க்கும் கூடுதலான தொகுதிகளைக் கைப்பற்றுவோம் என்றார்.