செய்திகள்
கோப்புப்படம்

கேரளாவில் இன்று புதிதாக 13,270 பேருக்கு கொரோனா: 147 பேர் உயிரிழப்பு

Published On 2021-06-16 12:57 GMT   |   Update On 2021-06-16 12:57 GMT
கேரளாவில் இன்று 15,689 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 1,09,794 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்தியாவிலேயே தற்போது தினசரி கொரோனா பாதிப்பு கேரள மாநிலத்தில்தான் அதிகமாக உள்ளது. நேற்று புதிதாக 12,246 பாதிக்கப்பட்டிருந்தனர். இன்று அதன் எண்ணிக்கை சுமார் ஆயிரம் கூடி 13,270 ஆக உயர்ந்துள்ளது. 15,689 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 147 பேர் உயிரிழந்துள்ளனர்.

அம்மாநிலத்தில் தற்போது 1,09,794 பேர் சிகிச்சை பெற்று வருகிறாரக்ள். இதுவரை 11,655 பேர் உயிரிழந்துள்ளனர்.
Tags:    

Similar News