செய்திகள்
மாணவர்களின் உயிர் முக்கியம்... பிளஸ்2 பொதுத்தேர்வை ரத்து செய்தது ஒடிசா அரசு
மாநில பாடத்திட்டங்களின் கீழ் படிக்கும் மாணவர்களின் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை சில மாநிலங்கள் ரத்து செய்துள்ளனன.
புவனேஸ்வர்:
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை மத்திய அரசு ரத்து செய்தது. இதையடுத்து மாநில பாடத்திட்டங்களின் கீழ் படிக்கும் மாணவர்களின் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வதா, நடத்துவதா என்பது குறித்து பல்வேறு மாநிலங்களும் ஆலோசித்து முடிவுகளை அறிவித்துவருகின்றன.
உத்தர பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்துள்ளன.
இதையும் படியுங்கள்: 12-ம்வகுப்பு தேர்வு ரத்து: மதிப்பீடு முறையில் திருப்தி இல்லையெனில் மாணவர்கள் தேர்வு எழுதலாம் -சிபிஎஸ்இ
அவ்வகையில் கொரோனா தொற்று காரணமாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். எந்த தேர்வையும் விட மாணவர்களின் உயிர்கள் தான் மிகவும் முக்கியம் என்றும் அவர் கூறினார்.