செய்திகள்
கோப்புப்படம்

அமெரிக்கா புறப்பட்ட விமானம் மீண்டும் டெல்லியிலேயே தரையிறங்க காரணமாக இருந்த வவ்வால்

Published On 2021-05-28 14:14 GMT   |   Update On 2021-05-28 14:14 GMT
டெல்லியில் இருந்து இன்று அதிகாலை அமெரிக்காவின் நியூஜெர்சிக்கு புறப்பட்ட விமானத்தில் வவ்கால் காணப்பட்டதால் உடனடியாக விமானம் டெல்லிக்கு திரும்பியது.
ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானம் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவின் நியூஜெர்சி நெவார்க் நகரத்திற்கு இன்று அதிகாலை 2.20 மணிக்கு புறப்பட்டது.

விமானம் புறப்பட்ட அரைமணி நேரத்திற்குப் பிறகு விமான ஊழியருக்கான கேபினில் வவ்வால் ஒன்று இருந்தது தெரியவந்தது. இந்த தகவலை ஊழியர்கள் விமானிகளுக்கு தெரிவித்தனர். உடனடியாக விமானிகள் விமானத்தை மீண்டும் டெல்லிக்கு திருப்ப முடிவு செய்தனர்.

விமானம் புறப்பட்டபின், திரும்பியதால் எமர்ஜென்சி காரணமாக தரையிறங்குகிறது என அறிவிக்கப்பட்டது. விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்ட பின்னர்தான், விமானத்தில் வவ்வால் காணப்பட்டதால், தரையிறக்கப்பட்டது தெரியவந்தது. பின்னர் வனத்துறை ஸ்டாப் அழைக்கப்பட்டு, கேபினில் இருந்த வவ்வால் பிடிக்கப்பட்டது.

விமானப் பயணிகள் மாற்று விமானம் மூலம் நெவார்க் புறப்பட்டனர்.
Tags:    

Similar News