செய்திகள்
ராஜீவ் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ராகுல் காந்தி

இன்று நினைவு தினம்... தந்தையின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்திய ராகுல் காந்தி

Published On 2021-05-21 05:42 GMT   |   Update On 2021-05-21 05:42 GMT
ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி நாடு முழுவதிலும் உள்ள காங்கிரஸ் அலுவலகங்களில் அவரது உருவப்படங்கள் மற்றும் உருவச்சிலைக்கு மரியாதை செலுத்தப்படுகிறது.
புதுடெல்லி:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் அவரது மகனும், எம்பியுமான ராகுல் காந்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதேபோல் பல்வேறு தலைவர்களும் ராஜீவ் நினைவிடத்திற்கு வந்து மரியாதை செலுத்தினர். 

ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி நாடு முழுவதிலும் உள்ள காங்கிரஸ் அலுவலகங்களில் அவரது உருவப்படங்கள் மற்றும் உருவச்சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

சமூக வலைத்தளங்களில் ராஜீவ் காந்தி குறித்த நினைவுகளையும், அவரது சிறப்புகள் குறித்தும் பலரும் பதிவிட்டவண்ணம் உள்ளனர்.
Tags:    

Similar News