செய்திகள்
கோப்புப்படம்

கேரளாவில் 37,290 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2021-05-11 21:20 GMT   |   Update On 2021-05-11 21:20 GMT
கேரளாவில் நேற்று ஒருநாளில் மட்டும், 1 லட்சத்து 39 ஆயிரத்து 287 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.
திருவனந்தபுரம்:

கேரளாவில் நேற்று ஒருநாளில் மட்டும், 1 லட்சத்து 39 ஆயிரத்து 287 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 26.77 சதவீதம் பேருக்கு அதாவது 37 ஆயிரத்து 290 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 32 ஆயிரத்து 978 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

நேற்று மட்டும் 79 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். இதுவரை மொத்தம் 5 ஆயிரத்து 958 பேர் இறந்துள்ளனர்.
Tags:    

Similar News