செய்திகள்
மம்தா பானர்ஜி,

பாதுகாப்பு படையை பா.ஜனதா தவறாக பயன்படுத்துகிறது - மம்தா பானர்ஜி பாய்ச்சல்

Published On 2021-04-10 09:24 GMT   |   Update On 2021-04-10 09:24 GMT
மேற்கு வங்காளத்தில் தேர்தல் வன்முறையில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தில் தேர்தல் வன்முறையில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

“4 பேரை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக்கொன்று உள்ளனர். இது கண்டனத்துக்குரியது. பாதுகாப்பு படையை பா.ஜனதா தனது தேவைக்காக தவறாக பயன்படுத்துகிறது” என்றார்.


துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியானது தொடர்பாக மாநில அரசிடம் தேர்தல் ஆணையம் அறிக்கை கேட்டுள்ளது.

Tags:    

Similar News