செய்திகள்
ரகளையில் ஈடுபட்ட ரசிகர்கள்

தெலுங்கானாவில் வக்கீல் சாப் திரைப்படம் திடீர் நிறுத்தம் - திரையரங்கை சூறையாடிய பவன் கல்யாண் ரசிகர்கள்

Published On 2021-04-09 23:11 GMT   |   Update On 2021-04-09 23:11 GMT
இந்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற 'பிங்க்' படத்தின் தெலுங்கு ரீமேக் வக்கீல் சாப். இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் அஜித் குமார் நடித்திருந்தார்.
ஐதராபாத்:

ஸ்ரீராம் வேணு இயக்கத்தில் பவன் கல்யாண், பிரகாஷ் ராஜ், நிவேதா தாமஸ், அஞ்சலி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் வக்கீல் சாப். இந்தப் படத்தினை தில் ராஜு, போனி கபூர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளார்கள்.

இந்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற 'பிங்க்' படத்தின் தெலுங்கு ரீமேக் இதுவாகும். இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் அஜித் குமார் நடித்திருந்தார்.



இந்நிலையில், ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வக்கீல் சாப் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. இதனிடையே தெலுங்கானாவின் ஜகுலம்பா கத்வால் பகுதியிலுள்ள திரையரங்கு ஒன்றில் தொழில்நுட்ப காரணமாக வக்கீல் சாப் திரைப்படம் திடீரென நிறுத்தப்பட்டது. 

இதனால் ஆத்திரமடைந்த பவன் கல்யாண் ரசிகர்கள் திரையரங்கின் கதவு உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக வக்கீல் சாப் திரைப்படத்தின் டிரைலர் திரையரங்கில் வெளியானபோதும் பவன் கல்யாண் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News