செய்திகள்
டெல்லியில் அனைத்து வகுப்புகளுக்கான பள்ளிகளும் மூடல்: கெஜ்ரிவால் அறிவிப்பு
டெல்லியில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருவதால், அம்மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இந்தியாவில் கொரோனா முதல் அலையைவிட தற்போது 2-ம் அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் தினந்தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டிய வண்ணம் உள்ளது. இதனால் மருத்துவமனை படுக்கைகள் விரைவாக நிரம்பி வருகின்றன.
இதனால் ஒவ்வொரு மாநில அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்றை தடுக்க, கெஜ்ரிவால் தலைமையிலான அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அம்மாநிலத்தில் டாக்டர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சிகிச்சை அளிப்பதில் சிக்கர் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்த உத்தரவு வரும் வரை அனைத்து பள்ளிகளும் (தனியார் மற்றும் அரசு) மூடப்படுகிறது. அனைத்து வகுப்புகளும் நடைபெறாது என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.