செய்திகள்
உயிரிழந்த வீரரின் உடலை சுமந்து வரும் சக வீரர்கள்

மாவோயிஸ்டுகளுடன் கடும் சண்டை- பல வீரர்கள் மாயம்

Published On 2021-04-04 04:38 GMT   |   Update On 2021-04-04 04:47 GMT
சத்தீஸ்கர் காட்டுப்பகுதியில் மாவோயிஸ்டுகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 5 வீரர்கள் உயிரிழந்தனர்.
ராய்ப்பூர்:

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர்- சுக்மா மாவட்ட எல்லையில் உள்ள வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர், மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை ஏற்பட்டது.

இந்த சண்டையில் 5 வீரர்கள் கொல்லப்பட்டனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 10க்கும் மேற்பட்ட வீரர்களைக் காணவில்லை. இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.



என்கவுண்டர் நடந்த பகுதியில் கூடுதல் படையினர்  குவிக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெறுகிறது. 

என்கவுண்டரில் உயிரிழந்த வீரர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளனர். 
Tags:    

Similar News