செய்திகள்
பிளாட்பாரத்தில் ஏறிய லாரி... 2 பேர் உடல் நசுங்கி உயிரிழந்த பரிதாபம்
டெல்லியில் பிளாட்பாரத்தில் லாரி ஏறியதால் 2 பேர் உயிரிழந்தது தொடர்பாக லாரி டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி:
டெல்லி காஷ்மியர் கேட் பகுதியில் இன்று காலையில் அதிவேகமாக சென்றுகொண்டிருந்த லாரி, கட்டுப்பாட்டை இழந்து, தாறுமாறாக ஓடியது. ஒரு ஸ்கூட்டரை இடித்து தள்ளியதுடன், பிளாட்பாரத்தில் ஏறியது. இதனால் பிளாட்பாரத்தில் தூங்கிக்கொண்டிருந்த 2 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பேர் பலத்த காயமடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.