செய்திகள்
ரபேல் போர் விமானங்கள்

மேலும் மூன்று ரபேல் போர் விமானங்கள் அடுத்த வாரம் இந்தியா வருகின்றன

Published On 2021-03-25 21:57 GMT   |   Update On 2021-03-25 21:57 GMT
பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.
புதுடெல்லி:

மத்திய அரசு 2016-ல் பிரான்சின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம், 59 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிற்கு 36 ரபேல் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்தது.

இதன்படி, 2020 ஜூலை முதல் 2021 ஜனவரி வரை 11 ரபேல் விமானங்கள் வழங்கப்பட்டு உள்ளன. அவை, பஞ்சாப் மாநிலம் அம்பாலாவில் உள்ள இந்திய விமானப்படை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் அடுத்த வாரத்திலும், ஏப்ரல் மத்தியில் மேலும் ஒன்பது ரபேல் விமானங்களும் இந்தியாவுக்கு வழங்கப்பட உள்ளன.
Tags:    

Similar News