செய்திகள்
கேரளாவில் இன்று 2,078 பேருக்கு கொரோனா பாதிப்பு
கேரளாவில் கொரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 25,009 ஆக உள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் இன்று 2,078 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று 15 பேர் உயிரிழந்த நிலையில் 2,111 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.
மாநிலத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 11 லட்சசத்து 02 ஆயிரத்து 353 ஆக உள்ளது. கொரோனாவில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்து 72 ஆயிரத்து 554 ஆகும். கேரளாவில் கொரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 25,009 ஆக உள்ளது.
கொரோனா தொற்றை கண்டறிய 58,777 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. தொற்று பாதிப்பு விகிதம் 3.54 சதவிகிதமாக உள்ளது.