செய்திகள்
உத்தவ் தாக்கரே

சச்சின், கோலி மூலமாக பார்த்த செஞ்சுரியை, தற்போது பெட்ரோல், டீசல் விலை மூலம் பார்க்கிறோம்- உத்தவ் தாக்கரே

Published On 2021-02-28 14:24 GMT   |   Update On 2021-02-28 14:24 GMT
பெட்ரோல், டீசல் விலை உயர்வை சச்சின் தெண்டுல்கர் மற்றும் விராட் கோலி ஆகியோரின் சதங்கள் மூலம் ஒப்பிட்டு உத்தவ் தாக்கரே விமர்சன் செய்துள்ளார்.
இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. ஒருசில மாநிலங்களில் பெட்ரோல் விலை சதம் கண்டுள்ளது. மாநில அரசுகள் கண்டனங்கள் தெரிவித்ததுடன், மத்திய அரசு வரியை குறைக்க வேண்டும் என கோரிக்கைகள் விடுத்து வருகின்றன. ஆனால் மத்திய அரசு அதைப்பற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை.

மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே ‘‘பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. சச்சின் தெண்டுல்கர், விராட் கோலி சதம் அடித்ததை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் தற்போது பெட்ரோல், டீசல் விலை செஞ்சுரி அடிப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம்’’ என அவரது விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News