செய்திகள்
குழந்தைகள் சிகிச்சை பிரிவில் படுத்து தூங்கிய தெருநாய்

குழந்தைகள் சிகிச்சை பிரிவில் படுத்து தூங்கிய தெருநாய்

Published On 2021-02-27 02:34 GMT   |   Update On 2021-02-27 02:34 GMT
குழந்தைகள் சிகிச்சை பிரிவில் தெருநாய் படுத்து தூங்கிய வீடியோ மற்றும் புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சித்ரதுர்கா (மாவட்டம்) டவுனில் மாவட்ட தலைமை மருத்துவமனை உள்ளது. இங்கு குழந்தைகள் சிகிச்சை பிரிவு தனியாக உள்ளது. இந்த நிலையில் மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் சிகிச்சை பிரிவில் உள்ள படுக்கையில் தெருநாய் ஒன்று படுத்துகிடந்துள்ளது. 

ஏழை, எளியோர் சிகிச்சைக்காக வந்தால், டாக்டர்கள் படுக்கை இல்லை எனக்கூறி அனுப்பி விடுவதாகவும், ஆனால் தற்போது குழந்தைகள் சிகிச்சை பிரிவில் இருக்கையில் நாய் படுத்து தூங்கும் சம்பவம் நடந்துள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

இதற்கிடையே குழந்தைகள் சிகிச்சை பிரிவில் நாய் படுத்துள்ள வீடியோ மற்றும் புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும், பணியில் அலட்சியமாக இருந்த டாக்டர்கள், ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News