செய்திகள்
கோப்புப்படம்

கேரளாவில் இன்று புதிதாக 4,584 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2021-02-18 18:04 GMT   |   Update On 2021-02-18 18:04 GMT
கேரளாவில் இன்று புதிதாக 4,584 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 5,193 பேர் குணமடைந்துள்ளனர்.
நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக தற்போது கேரளா உள்ளது. அம்மாநிலத்தில் இன்று புதிதாக 4,584 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 20,80,677  லட்சமாக உயர்ந்துள்ளது.

அதேபோல், இன்று ஒரே நாளில் 5,193 பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் அம்மாநிலத்தில் இதுவரை கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 19,90,454   ஆக உயர்ந்துள்ளது.  

கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 4,046 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்பால் 60,178 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்று அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
Tags:    

Similar News