செய்திகள்
அரவிந்த் கெஜ்ரிவால் புத்தாண்டு கொண்டாட்டம் என வைரலாகும் புகைப்படம்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் புத்தாண்டு கொண்டாட்டம் என கூறி வைரலாகும் புகைப்படம் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலையில் தொப்பி அணிந்து இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் புகைப்படம் டெல்லியில் உள்ள ஜம்மா மஸ்ஜித் ஒன்றில் அரவிந்த் கெஜ்ரிவால் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை செய்த போது எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆண்டின் முதல் நாளை முன்னிட்டு, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜம்மா மஸ்ஜித்தில் டெல்லி மற்றும் நாட்டிற்காக பிரார்த்தனை செய்தார் எனும் தலைப்பில் வைரல் புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், அது நான்கு ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. உண்மையில் இந்த புகைப்படம் ஜூலை 4, 2016 அன்று பஞ்சாப் மாநிலத்தில் ரம்ஜான் பண்டிகை மாதத்தில் சிறப்பு பிரார்த்தனையின் போது எடுக்கப்பட்டது ஆகும்.
அந்த வகையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புத்தாண்டை வரவேற்க ஜம்மா மஸ்ஜித் செல்லவில்லை என்பது உறுதியாகிவிட்டது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.