செய்திகள்
வருமானவரி

வருமானவரி தாக்கல் கடைசி தேதி நீட்டிப்பு - ஜனவரி 10-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்

Published On 2020-12-30 18:53 GMT   |   Update On 2020-12-30 18:53 GMT
வருமானவரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை 3-வது முறையாக நீட்டித்துள்ள மத்திய அரசு, வருகிற ஜனவரி 10-ந் தேதிக்குள் தாக்கல் செய்யலாம் என்று அறிவித்துள்ளது.
புதுடெல்லி:

2019-20-ம் நிதியாண்டுக்கு தனிநபர்கள் வருமானவரிதாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை 3-வது முறையாக நீட்டித்துள்ள மத்திய அரசு, வருகிற ஜனவரி 10-ந் தேதிக்குள் தாக்கல் செய்யலாம் என்று அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் வருமானவரிகணக்கு தணிக்கை செய்யப்படவேண்டிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசித்தேதியும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது, வருகிற பிப்ரவரி 15-ந் தேதிவரை அவர்கள் கணக்கு தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக வருமானவரிசெலுத்துவோர் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை கருத்தில் கொண்டு கடைசித்தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிதியாண்டில் கடந்த 28-ந் தேதி வரை 4.54 கோடி வருமானவரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் அந்த எண்ணிக்கை 4.77 கோடியாக இருந்தது.
Tags:    

Similar News