செய்திகள்
கைது

பச்சிளம் குழந்தையை கொன்று வீட்டில் புதைத்த கொடூர தாய்- பரபரப்பு தகவல்கள்

Published On 2020-12-04 13:40 GMT   |   Update On 2020-12-04 13:40 GMT
கள்ளக்காதல் மோகத்தால், பச்சிளம் குழந்தையை கொன்று வீட்டில் புதைத்த தாயை போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம்:

திருவனந்தபுரம் மாவட்டம் நெடுமங்காட்டை சேர்ந்தவர் விஜி (வயது 29). இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அவரை விட்டு பிரிந்து தந்தை வீட்டில் வசித்து வந்தார். அப்போது, அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

இதன்பிறகு விஜியை கடந்த சில நாட்களாக காணவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாரிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விஜியை தேடி வந்தனர். நேற்று நெடுமங்காட்டில் உள்ள ஒரு கடையில் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விஜியை மடக்கி பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று துருவி, துருவி விசாரணை நடத்தினர். இதில், திடுக்கிடும் தகவல் வெளியானது.

அதாவது, பிறந்த 3 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை விஜி கொன்று விட்டு, வீட்டிலேயே புதைத்த கொடூர சம்பவம் வெட்ட வெளிச்சத்துக்கு வந்தது. கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்ட விஜி, அதற்கு இடையூறாக தன்னுடைய பச்சிளம் குழந்தை இருக்கும் என்று நினைத்து உளளார்.

இதனால் அவர் பெற்ற குழந்தையை தீர்த்துக்கட்டி உள்ளார். இதனை தொடர்ந்து போலீசார், வீட்டின் பின்புறத்தில் புதைத்த குழந்தையை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜியை கைது செய்தனர்.
Tags:    

Similar News