செய்திகள்
காங்கிரஸ்

முதல்-மந்திரியாக யார் ஆவார் என கருத்து கூற வேண்டாம்: காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு வேண்டுகோள்

Published On 2020-11-09 01:51 GMT   |   Update On 2020-11-09 01:51 GMT
கர்நாடகத்தில் அடுத்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் முதல்-மந்திரி யார் ஆவார் என்பது குறித்து சில நிர்வாகிகள், கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் கருத்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என்று அக்கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
பெங்களூரு

கர்நாடக காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் அடுத்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் முதல்-மந்திரி யார் ஆவார் என்பது குறித்து எங்கள் கட்சியின் சில நிர்வாகிகள் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். நேரம் வரும்போது, அதுபற்றி முடிவு செய்யப்படும்.

இந்த விஷயம் குறித்து நிர்வாகிகள், கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் கருத்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும். கட்சியை பலப்படுத்தும் பணியில் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஈடுபட வேண்டும். கட்சியின் நலன் கருதி அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு கட்சியை ஆட்சியில் அமர்த்த பாடுபட வேண்டும்.

இவ்வாறு ஒழுங்கு நடவடிக்கை குழு தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News